# மாற்றுச்சிந்தனை : ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். க ாசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவர
என்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்த கதாநாயகன் என்றால் வேறுயாருமே இல்லை . . . அது புரூஸ்லி மட்டும்தான். அவரது ரிட்டர்ன் ஆப் தி டிராகன் படத்தை எத்தனை முறை இதுவரை பார்த்திருக்கிறேன் என்று கணக்கு கூட சொல்லமுடியவில்லை. தியேட்டரில் சென்று மட்டுமே ஒரு 20 முறை இருக்கலாம். அந்த காலத்தில் கிராமத்து சிறுவர்களான எங்களுக்கு அவர் படங்கள் தான் (அசை படங்கள் அல்ல) முதல் அறிமுகம்/ ஆதர்சம் எல்லாமே. அவரை திரையில் பார்த்து அதிசயித்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அப்புறம்தான். சைக்கிள் சீட்கவர்கள் முதல் . . . பனியன்கள் ... போஸ்டர்கள் வரை . . . அவர் தான் அன்று சூப்பர் ஸ்டார். எட்டாம் வகுப்பிலேயே மணி மாஸ்டரிடன் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டதால்... இந்த புரூஸ்லீ பைத்தியம் உச்சத்தில் இருந்தது எனலாம். இன்றும் ஞாபகம் இருக்கிறது . . . பாயும்புலி படத்திற்கு சென்று .. அதில் ரஜினி ஒரு சின்ன உருளை வடிவ டிரம்மின் மேல் நிற்கும் காட்சி... மேலே அவர் கயிற்றை பிரேமில் தெரியாவண்ணம் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்யும் வீரதீரக்காட்சியை ( wink emoticon ) அரங்கமே அதிசயத்தில் பார்த்துக்கொண்டிருக்க நானும் எமது புரூ