Skip to main content

Posts

சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள்

#‎ மாற்றுச்சிந்தனை‬ : ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். க ாசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவர
Recent posts

‪#‎ஹாலிவுட் , கோலிவுட், புரூஸ்லி & தமிழக அரசியல்‬

என்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்த கதாநாயகன் என்றால் வேறுயாருமே இல்லை . . . அது புரூஸ்லி மட்டும்தான். அவரது ரிட்டர்ன் ஆப் தி டிராகன் படத்தை எத்தனை முறை இதுவரை பார்த்திருக்கிறேன் என்று கணக்கு கூட சொல்லமுடியவில்லை. தியேட்டரில் சென்று மட்டுமே ஒரு 20 முறை இருக்கலாம். அந்த காலத்தில் கிராமத்து சிறுவர்களான எங்களுக்கு அவர் படங்கள் தான் (அசை படங்கள் அல்ல) முதல் அறிமுகம்/ ஆதர்சம் எல்லாமே. அவரை திரையில் பார்த்து அதிசயித்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அப்புறம்தான். சைக்கிள் சீட்கவர்கள் முதல் . . . பனியன்கள் ... போஸ்டர்கள் வரை . . . அவர் தான் அன்று சூப்பர் ஸ்டார். எட்டாம் வகுப்பிலேயே மணி மாஸ்டரிடன் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டதால்... இந்த புரூஸ்லீ பைத்தியம் உச்சத்தில் இருந்தது எனலாம். இன்றும் ஞாபகம் இருக்கிறது . . . பாயும்புலி படத்திற்கு சென்று .. அதில் ரஜினி ஒரு சின்ன உருளை வடிவ டிரம்மின் மேல் நிற்கும் காட்சி... மேலே அவர் கயிற்றை பிரேமில் தெரியாவண்ணம் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்யும் வீரதீரக்காட்சியை ( wink emoticon ) அரங்கமே அதிசயத்தில் பார்த்துக்கொண்டிருக்க நானும் எமது புரூ

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி

சின்னைய்யாவுக்கு வணக்கம் . . . அந்த முழுப்பக்க விளம்பரங்கள், மேடை அமைப்புகள், லைட்டிங்... டிஜிட்டல் குறும்படங்கள் எல்லாமே கேப்டனை சி கிளாஸ் ரேஞ்சுக்கும் உங்களை ஏ க்ளாஸ் ரேஞ்சுக்கும் காண்பித்தன என்றால் மிகையில்லை. (ஸ்டாலின் அவர்களின் மெகா புரோகிராம் தான் எப்படி சவால் விடும் என்று பார்க்கனும்) .அதுவும் அந்த அரங்கில் பாதியை பலருக்கும் சீட் போட்டு மீதம் உள்ள பிரமாண்டமான பாதியில் சுரே மைக் போட்டு ஒரு மேற்கத்திய கிருத்துவ பிரச்சாரகர் மாதிரி ஒரு ஸ்டைலில் கையை விரித்து குவித்து நடந்துகொண்டே ... தெளிவாக “ உங்கள் சின்னையாவாகிய நான்”... சாரி... உங்க மக்கள் பேச்சை கேட்டு கேட்டு அப்படி தோணிச்சு... “அன்பு மணியாகிய நான்” என்று முழுப் பொறுப்பேற்று கார்ப்பரேட் லீடர்ஷிப் ஸ்டைலில் ஆரம்பித்ததும் அட்டகாசம் தான் ! தமிழகத்தின் முதல் கையெழுத்தையும் போட்டுவிட்டீர்கள். சரக்கும் முடிந்தது. அல்ரெடி 2 லட்சம் கோடி பற்றாக்குறையை அம்மையார் உங்களுக்கு விட்டுச்செல்லவேண்டிய சூழல் !! அதற்கும் வட்டி வேறு இருக்கு என்று சொன்னீர்கள்.. அதற்கப்புறம் இலவச கல்வி முதல் பல்வேறு அருமையான நலத்திட்டங்களை உண்மைய

சூனா சாமியும் ஜே.என்.யூ வும் . . .

ஜே.என்.யூ மீது யார் கைவைத்தாலும் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உங்கள் மடத்தனம் வெளிப்படுத்தப்படும். அப்படியென்ன பெருமை அந்த பல்கலை கழகத்துக்கு? அவர்களின் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் அலசுபவர்கள்.. இளைஞர்கள்... மூடர் கூடம் அல்ல . . . சிந்தனைகளின் சிகரங்கள் வாழ்ந்த வாழும் இடம்.  கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது எ

‎வாரியர் டயட் , தண்ணீர்_டயட்‬ ‪- ‎என்_அனுபவம்‬ :

எனது வாரியர் டயட் நூல் பற்றி எழுதுவதற்கான ஆய்வுகளின் போது இந்த தண்ணீர் டயட் பற்றி பலமுறை படிக்க நேர்ந்தது. எனது பக்கத்து கடை சேட்டு (ஜைனர்) வேறு இதை பற்றீ சொல்லியிருந்தார் சென்ற மாதம். சரி பார்த்துவிடுவோம் என்று சனி இரவு உணவருந்திவிட்டு . . . அதன் பின்னர் அடுத்த உணவை ஞாயிறு இரவு அருத்தலாம் என்று ஆரம்பித்தேன். காலை 9 மணிக்கு அனைவரும் உணவருந்த சென்ற போது நான் மாலை சூரியன் மறைந்த பின்னரே சாப்பிட இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் ! மதியம் வெஜ் பிரியாணி.. சாப்பிட அழைத்தனர். இல்லை இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். தலை சுற்றல் ஆரம்பித்திருந்தது. மனம் குவிய மறுத்தது. தாகம் எடுத்த போதெல்லாம்.. வயிறு கிள்ளிய போதெல்லாம்... சுத்தமான தண்ணீர் மட்டுமே ! அமைதியாக அறையை சுத்தம் செய்வது என்று சிறு சிறு வேலைகளில் மனதை செலுத்தினேன். மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்தபோது... தலைசுற்றல் மயக்கம் எல்லாம் நின்று போயிருந்தது. ஒரு குளிர்ந்தநீர் குளியல்.. பின்பு சென்று காலை எனக்காக வைத்திருந்த வெண்பொங்க்ல், மதிய வெஜிடபிள் பிரியாணி இரண்டையும் சேர்த்து பசியடங்க சாப்பிட்டேன். அது எவ்வளவு

விசாரணை , தங்கப்பதக்கம் , வாலடர் வெற்றிவேல் !

ஸ்காட்லாந்து யார்டு போலிஸ்க்கு அப்புறம் நாங்கதான் என்று பெருமை பட்டுக்கொண்ட அனைத்து தமிழக காவல்துறை அதிகாரிகளும் குடும்பத்தோடு அவசியம் பார்க்கவேண்டிய படம் எங்கூரு ஆட்டோ சந்திரன் அண்ணன் எழுதி வெற்றிமாறன் தயாரித்திருக்கும் குரலற்றவர்களின் காவியம் “விசாரணை “ . இன்று நண்பர்கள் சென்றபோது கதாசியரையரையும் தியேட்டரில் சந்தித்திருக்கிறார்கள் ! கோவை எத்தனையோ புரட்சிகளுக்கு சொந்தமான ஊர். அதில் இந்த படமும் ஒன்று ! தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல் என்று ஹீரோயிசத்தையும் பொய்முகங்களையும் க ாசாக்கிப்பார்த்த திரைத்துறை சாதாரண மக்களில் கண்ணீர்கதையை, கானகக் குரலை முதன்முறையாக ஆணித்தரமாக காட்சிப்படுத்தி இருக்கிறது இப்படம் மூலம் ! நன்றி வெற்றிமாறன் & எங்கூரு சந்திரன் அண்ணன். உங்களிருவருக்கும் ஆயிரம் அவார்டுகள் மானசீகமாக கிடைக்கும் இப்படத்தின் மூலம். தனுஷ்.. நன்றி உங்களுக்கும் தான் ! பின்குறிப்பு: பல்வேறு நாடுகளிலும் சென்று படித்த நண்பர் சரவணன் அவர்கள் சொல்லுவார் . . . “செல்லா உலகிலேயே அரசாங்கங்களை விட பெரிய டெரரிஸ்ட்கள் இன்னும் இவ்வுலகில் உருவாகவில்லை என்று”.. அது எவ்வளவு நிசம் என்

விபத்தில் வீழ்ந்த விருட்சத்தின் விதை #வெமுலா

எனக்கு ரோஹித் வெமுலாவின் தற்கொலை பற்றி எழுத ஆரம்பித்தபின்பு எனது இந்துத்துவ முகநூல் எழுத்தாளர்கள், மோடி ஆதரவாளர்கள், வலதுசாரிகள் மீதான ஒப்பீனியனே முற்றிலுமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். சில தினங்களுக்கு முன்பு கொஞ்சம் கோபமாக எங்கள் சீனியர் எழுத்தாளர் திரு பாமரன் பாமரன் தமிழ்நாடு அவர்களுக்கு செல்பேசியில் கூப்பிட்டேன். “என்ன செல்லா, என்ன விசயம்” என்று கேட்டார் . .இல்லை நான் புத்த மதத்துக்கு மாறவேண்டும்.. வழிமுறைகள் சொல்லுங்கள் என்றேன். நிச்சயம் அவரது ஈழ (இலங்கை என்று எழுதினால் இன்றும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் ) நிலைப்பாடுகள் தெரிந்த அனைவருக்கும் புரியும் இது ஒன்றும் அவருக்கு விருப்பமானதாக இருக்காது என்று. இருந்தாலும் ஒரு உண்மையான பெரியாரிய சிந்தனையாளர் என்பதால் நானும் கேட்டேன்.. அவரும் எதையும் காண்பிக்காமல்.. தோழனே ஒரு ரெண்டுநாள் டைம் கொடுங்க... கேட்டுட்டு சொல்றேன் என்றார். இன்றுவரை கூப்பிடவில்லை வழக்கம்போல ! இப்பொழுது அது மேட்டர் அல்ல.. அந்த அளவுக்கு என்னை தள்ளியது எது என்று யோசிக்கிறேன். அது இந்த இளம் ஆராய்ச்சியாளனின் மரணத்தை ”மத்திய மனித வள மேம்பாட்டு” இராணி ம