மற்றபடி தமிழ் என்பது வெறும் மொழியல்ல.. அது ஒரு உணர்வானால் ஆரியன் என்று அவர்களை, அதுவும் ஓரளவுக்கு படித்த சமூக மாற்றத்தை சிந்திக்கும் இக்காலத் தலைமுறையினரை ஒதுக்கிவைப்பது என்பது வரலாற்றுத் தவறாகவே முடியும்! ( 69% சதவிகித இட ஒதுக்கீடு, காஞ்சி சங்கரரை கைது செய்தது என்று சாதித்தவர் ஜெயலலிதா என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது!)
நமக்கே 5 தலைமுறைக்கு முன் பிறந்த முப்பாட்டன் பேர் ஞாபகம் இல்லாதபோது இக்கால தாய்ப்பாலோடு தமிழ்பால் குடித்து வளர்ந்த (அவர்கள் வீடுகளில் சமஸ்கிருதத்திலா தாலாட்டுகிறார்கள்!) கணினி, / இணையத் தலைமுறையை 2000 ஆண்டு வரலாறு சொல்லி அவர்களின் ஆரிய பரம்பரையையே காரணம் காட்டி இவர்களையும் தண்டிப்பது எந்த வகையிலும் ஞாயமாகவோ, நேர்மையாகவோ, பகுத்தறிவாகவோ, சுயமரியாதையாகவோ எனக்குத் தெரியவில்லை. குழந்தை திருமணம் செய்த அவர்களே இனறு பரவலாக காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ளும், பெரியார் சிந்தனைகளை, மார்க்சியச் சிந்தனைகளை, தலித்தியச் சிந்த்னைகளை ஏற்றுக்கொள்ளும் அளவு வளர்ந்திருக்கும் பொழுது திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இன்னும் இரட்டை டம்ளர்களில் இருந்து கூட மாறவில்லை என்பது திராவிட நிசம்!
Comments
Post a Comment