Skip to main content

‪#‎ஹாலிவுட் , கோலிவுட், புரூஸ்லி & தமிழக அரசியல்‬

என்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்த கதாநாயகன் என்றால் வேறுயாருமே இல்லை . . . அது புரூஸ்லி மட்டும்தான். அவரது ரிட்டர்ன் ஆப் தி டிராகன் படத்தை எத்தனை முறை இதுவரை பார்த்திருக்கிறேன் என்று கணக்கு கூட சொல்லமுடியவில்லை. தியேட்டரில் சென்று மட்டுமே ஒரு 20 முறை இருக்கலாம். அந்த காலத்தில் கிராமத்து சிறுவர்களான எங்களுக்கு அவர் படங்கள் தான் (அசை படங்கள் அல்ல) முதல் அறிமுகம்/ ஆதர்சம் எல்லாமே. அவரை திரையில் பார்த்து அதிசயித்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அப்புறம்தான். சைக்கிள் சீட்கவர்கள் முதல் . . . பனியன்கள் ... போஸ்டர்கள் வரை . . . அவர் தான் அன்று சூப்பர் ஸ்டார். எட்டாம் வகுப்பிலேயே மணி மாஸ்டரிடன் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டதால்... இந்த புரூஸ்லீ பைத்தியம் உச்சத்தில் இருந்தது எனலாம். இன்றும் ஞாபகம் இருக்கிறது . . . பாயும்புலி படத்திற்கு சென்று .. அதில் ரஜினி ஒரு சின்ன உருளை வடிவ டிரம்மின் மேல் நிற்கும் காட்சி... மேலே அவர் கயிற்றை பிரேமில் தெரியாவண்ணம் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்யும் வீரதீரக்காட்சியை ( wink emoticon ) அரங்கமே அதிசயத்தில் பார்த்துக்கொண்டிருக்க நானும் எமது புரூஸ்லீ ரசிகர் மன்ற நண்பர்களும் வயிறுவலிக்க சிறித்துக்கொண்டது wink emoticon . சரி இப்பொழுது மேட்டருக்கு வருகிறேன்.

இதுக்கும் தற்போதைய தமிழக அரசியலுக்கும் என்ன தொடர்பு செல்லா ? என்று கேட்பது புரிகிறது. அப்படியே சீனை இங்கே கட் செய்துவிட்டு மீண்டும் ரிட்டர்ன் ஆப் த டிராகன் படத்துக்கு செல்வோம். அதில் சக்நாரிஸ் உடனான அந்த பூனைக்குட்டி சண்டை தான் படத்தின் உச்சம். சக் நாரிஸ் எங்களது மற்றொரு ஆதர்சம். மார்சியல் ஆர்ட்ஸ் கலையின் நிகரற்ற சாம்பியன்களில் அவரும் ஒருவர். (கடைசியாக அவரது படத்தை செண்ட்ரல் தியேட்டரில் பார்த்தேன்... டெல்ட்டா ஃபோர்ஸ்) . அந்த புகழ்பெற்ற இரு மார்சியல் ஆர்ட் ஹீரோக்களும் அத்ல் மோதிக்கொள்ளவேண்டும். அந்த காட்சியமைப்பு... ஒளிப்பதிவு... ஆர்ப்பாட்டமில்லாத ஓசைகளற்ற மினிமலிஸ்ட் ஒலிச்சேர்ப்பு .. அந்த பூனைக்குட்டி... எல்லாம் அதை இன்றும் ஒரு உலகத்தரம் வாய்ந்த சண்டைக்காட்சிகளில் ஒன்றாக சினிமா ரசிகர்களால் போற்றப்படும் ஒரு க்ளாசிக்கல் ஃபைட் சீனாக நினவில் கொள்ளப்படுகிறது என்றால் அந்த புகழ் அனைத்தும் அதன் டைரக்டருக்கே போய்ச்சேரும் ! யாரந்த் டைரக்டர்.. அவர்தான் புரூஸ்லீ ! அதில் அந்த அற்புத பைட் சீனின் முடிவில் வில்லன் சக்நாரிஸ் சண்டையில் புரூஸ்லீயால் கொல்லப்படுவார். அவர் இறந்துகிடக்கும் காட்சிக்கு அடுத்த சீன் . . . புரூஸ்லி தனது சட்டையை போட்டுக்கொண்டு வெளியே வருவார். பார்த்தால் அங்கு இறந்துகிடக்கும் எதிரி சக்நாரிஸ் உடைய மேல் சட்டையும் அவரது பிளாக் பெல்ட்டும் இருக்கும். ஒரு சில வினாடிகள் யோசிப்பார்... பின்பு நேராக நடந்து சென்று அந்த சட்டையையும் பிளாக்பெல்ட்டையும் எடுத்து வந்து இறந்துகிடக்கும் எதிரியின் உடல்மீது மிகவும் மரியாதையாக போர்த்தி.. பெல்ட்டை வைத்துவிட்டு பிறகு வெளியேறுவார்.

இந்த ஒரு சீன் ஒரு உண்மையான போராளியின் மனவோட்டத்தை குறிக்கிறது எனலாம். அத்தகைய தகுதிவாய்ந்த ஒரு கடும் போராட்டத்துக்கு தமிழக அரசியல் இன்னும் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது. எங்கும் மரியாதையின்மை... நேர்மையின்மை... நாகரீகமின்மை . . . குழிபறிப்புகள்... கால்வாருதல்கள் . . . இப்படிப்பட்ட ஒரு கேவலமான போராட்டச்சூழல் எனக்கு மீண்டும் பாயும்புலி படத்தின் மகா சாதாரணமான அந்த ரஜினி ஜெய்சங்கர் காட்சியை ஞாபகப்படுத்துகிறது.

இதில் ஹிட்லர் மாதிரியே சல்யூட் அடிப்பதும்... குரலை ஏற்றி இறக்கிப்பேசும் ... இன்னொரு தம்பியின் காமடி சீன் .. சீரியசாக பார்க்கப்படும்போது... தமிழகம் ஒரு முன்னேறிய ஜனநாயக நாடாக.. இஸ்ரேல் போன்ற ஒரு சிறு வல்லரசாக மாறவேண்டுமென்றால் . . . கோலிவுட் ஹாலிவுட்டாக எவ்வளவு காலம் எடுக்குமோ ... அவ்வளவு காலம் ஆகலாம் என்று நினைத்துகொள்வேன் !

Comments

Popular posts from this blog

சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள்

#‎ மாற்றுச்சிந்தனை‬ : ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். க ாசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவர

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி

சின்னைய்யாவுக்கு வணக்கம் . . . அந்த முழுப்பக்க விளம்பரங்கள், மேடை அமைப்புகள், லைட்டிங்... டிஜிட்டல் குறும்படங்கள் எல்லாமே கேப்டனை சி கிளாஸ் ரேஞ்சுக்கும் உங்களை ஏ க்ளாஸ் ரேஞ்சுக்கும் காண்பித்தன என்றால் மிகையில்லை. (ஸ்டாலின் அவர்களின் மெகா புரோகிராம் தான் எப்படி சவால் விடும் என்று பார்க்கனும்) .அதுவும் அந்த அரங்கில் பாதியை பலருக்கும் சீட் போட்டு மீதம் உள்ள பிரமாண்டமான பாதியில் சுரே மைக் போட்டு ஒரு மேற்கத்திய கிருத்துவ பிரச்சாரகர் மாதிரி ஒரு ஸ்டைலில் கையை விரித்து குவித்து நடந்துகொண்டே ... தெளிவாக “ உங்கள் சின்னையாவாகிய நான்”... சாரி... உங்க மக்கள் பேச்சை கேட்டு கேட்டு அப்படி தோணிச்சு... “அன்பு மணியாகிய நான்” என்று முழுப் பொறுப்பேற்று கார்ப்பரேட் லீடர்ஷிப் ஸ்டைலில் ஆரம்பித்ததும் அட்டகாசம் தான் ! தமிழகத்தின் முதல் கையெழுத்தையும் போட்டுவிட்டீர்கள். சரக்கும் முடிந்தது. அல்ரெடி 2 லட்சம் கோடி பற்றாக்குறையை அம்மையார் உங்களுக்கு விட்டுச்செல்லவேண்டிய சூழல் !! அதற்கும் வட்டி வேறு இருக்கு என்று சொன்னீர்கள்.. அதற்கப்புறம் இலவச கல்வி முதல் பல்வேறு அருமையான நலத்திட்டங்களை உண்மைய

சூனா சாமியும் ஜே.என்.யூ வும் . . .

ஜே.என்.யூ மீது யார் கைவைத்தாலும் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உங்கள் மடத்தனம் வெளிப்படுத்தப்படும். அப்படியென்ன பெருமை அந்த பல்கலை கழகத்துக்கு? அவர்களின் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் அலசுபவர்கள்.. இளைஞர்கள்... மூடர் கூடம் அல்ல . . . சிந்தனைகளின் சிகரங்கள் வாழ்ந்த வாழும் இடம்.  கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது எ