ஒரு ஊருல ஒரு தனிக்கட்டை இருந்தானாம். அவன் தானே தனக்குத்
தெரிஞ்சமுறையில சுல்லி, பன்னாடை, விறகெல்லாம் வச்சு, மூணுகல்
அடுப்புக்கூட்டி, சுக்குத்தண்ணி வச்சு அவங்க ஊரில நிறைய விளையும்
தென்னையிலிருந்து கிடைக்கும் முக்கண்ணு கொட்டாங்குச்சியில ஊத்தி... சாலி'யா
அவங்கூரு பாட்டை பாடிக்கிட்டே குடிப்பானாம்.
அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இது புடிக்காதாம். பாக்குறவன்கிட்டயெல்லாம் இவனுக்கு எப்படி பில்டர்ல் டிகாக்சன் போட்டு காப்பி வைச்சு சாசர் ஊத்தி சிப் பன்னிக்குடிக்கனூம்னே தெரியலைன்னு கிண்டல் பன்னுவானாம். இதுனால தனிக்கட்டை கேலிகிண்டலுக்கு அப்பப்ப உட்படுத்தப்படறதும் உண்டாம். அவன் "எனக்கு எது இயல்பா தெரியுமோ அப்படித்தான் சுக்குக்காப்பி வச்சு சந்தோசமா கொட்டாங்குச்சில குடிக்கறேன்.. இவனுக்கு என்ன வந்துச்சி"ன்னு அலட்சியப்படுத்திக்கிட்டே வழமைபோல் இருந்தானாம்.
அப்பத்தான் ஒரு வெளியூர்க்காரன் ஊருக்கு டிராமா போடவந்தானாம். அவன்கிட்ட பக்கத்துவீட்டுகாரன் தனிக்கட்டைக்கு காப்பி ஒழுங்கா முறைப்படி போடத்தெரியலைன்னு புலம்புனானாம். அதுக்கு அந்த வெளியூர்க்காரன்... "அதெல்லாம் தப்பு. இப்படித்தான் காப்பி போடணும்னு ஒண்ணும் வரைமுறை தேவயில்லை. இந்த மாதிரி கட்டுப்பாடெல்லாம் பட்டிக்காட்டுத் தனம்"னு சொல்லி புரட்சிவசனம் பேசினபடியே நம்ம தனிக்கட்டை வீட்டுக்குப் போயி அவனுக்கு ஆறுதல் சொன்னானாம்.. "நீ பக்கத்துவீட்டுக்காரன் சொல்றான்னு கேக்காத.. நம்ம மரபுன்னு இருக்கறதையில்லாம் உடைக்கனும்... இப்படித்தான் காப்பித்தன்னீ போடம்னும்னு வரைமுறைய யாராவது சொன்னா கண்டுக்காத".
அந்த தனிக்கட்டைக்கு சந்தோசம் தாங்க முடியாம .. ஆகா என்னைப் புறிஞ்சிக்கிட ஆள் நீங்கதான்... உங்க கருத்து அற்புதம்னு சொல்லி, "ஒரு நிமிசம் இருங்க, காப்பிசாப்பிடலாம்"னு... சந்தோசத்துல காட்டுக்கு சுல்லிபொறுக்க ஓடினானாம். அவன் மனசெல்லாம் சந்தோசமா இருந்திச்சாம்.
வேகவேகமா திரும்பிவந்து அடுப்புகூட்டி காப்பித்தண்ணி வச்சு கொட்டாங்குச்சியில ஊத்தி வந்தவனுக்கு குடுத்தானாம். அந்த டிராமாக்காரன் கையில வாங்கும்போது சொன்னானாம்.. "என்ன நீ? .. காப்பி எப்படி வேணாலும் போடலாம்.. ஆனா பரிமாறும்போது வட்டமோ சதுரமோ இல்லாத ட்ரேயில் வைச்சு, நின்னுக்கிட்டும் உக்காந்துக்கிட்டும் இல்லாத மாதிரி பாவனையில, நீயாருன்னே தெரியாத மாதிரி தலையை துண்டால மூடி, முன்னெது பின்னெதுன்னு தெரியாத கப் அண்டு சாசர் 'ல ஊத்தி .. எம்மூஞ்சியப் பாக்காம வானத்தை மட்டும் பாத்துக்கிட்டு பரிமாறனும்"னு சொன்னானாம் ..
இதை சற்றும் எதிர்பாராத தனிக்கட்டை டென்சனாகி... "த்தூத்தேரி... இதுக்கு பக்கத்துவீட்டு பில்டர் காபிக்காரனே பரவாயில்லை... நீ நல்ல சகுணஞ்சொல்லி மாட்டுத்தாளில்ல விழுந்த பல்லி மாதிரியில்ல இருக்க" ன்னு காப்பித்தண்ணிய அவன் மூஞ்சில வீசுனானாம்.
--------------------------------------
இந்தக்கதைக்கும் சாரு தொடங்கி சுகாணாதிவாகர் வரை பின்னவீனத்துவம் பேசும் அனைத்து எழுத்தாளனுகளுக்கும் சத்தியமா தொடர்பு இருக்கு :-)
Related Reading: Postmodernism satire by exBostonian
Related Saying: எனக்கு "முன்"னும் தெரியாது.. "பின்"னும் தெரியாது... "மண்" நல்லா தெரியும் - எழுத்தாளர் பாமரன்
HOBOKEN, N.J. -- JENNY JONES: Boy, we have a show for you today!
Recently, the University of Virginia philosopher Richard Rorty made the
stunning declaration that nobody has "the foggiest idea" what
postmodernism means. "It would be nice to get rid of it," he said. "It
isn't exactly an idea; it's a word that pretends to stand for an idea."
This shocking admission that there is no such thing as postmodernism
has produced a firestorm of protest around the country. Thousands of
authors, critics and graduate students who'd considered themselves
postmodernists are outraged at the betrayal.
Today we have with us a writer -- a recovering postmodernist -- who believes that his literary career and personal life have been irreparably damaged by the theory, and who feels defrauded by the academics who promulgated it. He wishes to remain anonymous, so we'll call him "Alex."
Alex, as an adolescent, before you began experimenting with postmodernism, you considered yourself -- what? Close shot of ALEX. An electronic blob obscures his face. Words appear at bottom of screen: "Says he was traumatized by postmodernism and blames academics."
மேலும் படிக்க: இங்கே செல்லவும்
அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இது புடிக்காதாம். பாக்குறவன்கிட்டயெல்லாம் இவனுக்கு எப்படி பில்டர்ல் டிகாக்சன் போட்டு காப்பி வைச்சு சாசர் ஊத்தி சிப் பன்னிக்குடிக்கனூம்னே தெரியலைன்னு கிண்டல் பன்னுவானாம். இதுனால தனிக்கட்டை கேலிகிண்டலுக்கு அப்பப்ப உட்படுத்தப்படறதும் உண்டாம். அவன் "எனக்கு எது இயல்பா தெரியுமோ அப்படித்தான் சுக்குக்காப்பி வச்சு சந்தோசமா கொட்டாங்குச்சில குடிக்கறேன்.. இவனுக்கு என்ன வந்துச்சி"ன்னு அலட்சியப்படுத்திக்கிட்டே வழமைபோல் இருந்தானாம்.
அப்பத்தான் ஒரு வெளியூர்க்காரன் ஊருக்கு டிராமா போடவந்தானாம். அவன்கிட்ட பக்கத்துவீட்டுகாரன் தனிக்கட்டைக்கு காப்பி ஒழுங்கா முறைப்படி போடத்தெரியலைன்னு புலம்புனானாம். அதுக்கு அந்த வெளியூர்க்காரன்... "அதெல்லாம் தப்பு. இப்படித்தான் காப்பி போடணும்னு ஒண்ணும் வரைமுறை தேவயில்லை. இந்த மாதிரி கட்டுப்பாடெல்லாம் பட்டிக்காட்டுத் தனம்"னு சொல்லி புரட்சிவசனம் பேசினபடியே நம்ம தனிக்கட்டை வீட்டுக்குப் போயி அவனுக்கு ஆறுதல் சொன்னானாம்.. "நீ பக்கத்துவீட்டுக்காரன் சொல்றான்னு கேக்காத.. நம்ம மரபுன்னு இருக்கறதையில்லாம் உடைக்கனும்... இப்படித்தான் காப்பித்தன்னீ போடம்னும்னு வரைமுறைய யாராவது சொன்னா கண்டுக்காத".
அந்த தனிக்கட்டைக்கு சந்தோசம் தாங்க முடியாம .. ஆகா என்னைப் புறிஞ்சிக்கிட ஆள் நீங்கதான்... உங்க கருத்து அற்புதம்னு சொல்லி, "ஒரு நிமிசம் இருங்க, காப்பிசாப்பிடலாம்"னு... சந்தோசத்துல காட்டுக்கு சுல்லிபொறுக்க ஓடினானாம். அவன் மனசெல்லாம் சந்தோசமா இருந்திச்சாம்.
வேகவேகமா திரும்பிவந்து அடுப்புகூட்டி காப்பித்தண்ணி வச்சு கொட்டாங்குச்சியில ஊத்தி வந்தவனுக்கு குடுத்தானாம். அந்த டிராமாக்காரன் கையில வாங்கும்போது சொன்னானாம்.. "என்ன நீ? .. காப்பி எப்படி வேணாலும் போடலாம்.. ஆனா பரிமாறும்போது வட்டமோ சதுரமோ இல்லாத ட்ரேயில் வைச்சு, நின்னுக்கிட்டும் உக்காந்துக்கிட்டும் இல்லாத மாதிரி பாவனையில, நீயாருன்னே தெரியாத மாதிரி தலையை துண்டால மூடி, முன்னெது பின்னெதுன்னு தெரியாத கப் அண்டு சாசர் 'ல ஊத்தி .. எம்மூஞ்சியப் பாக்காம வானத்தை மட்டும் பாத்துக்கிட்டு பரிமாறனும்"னு சொன்னானாம் ..
இதை சற்றும் எதிர்பாராத தனிக்கட்டை டென்சனாகி... "த்தூத்தேரி... இதுக்கு பக்கத்துவீட்டு பில்டர் காபிக்காரனே பரவாயில்லை... நீ நல்ல சகுணஞ்சொல்லி மாட்டுத்தாளில்ல விழுந்த பல்லி மாதிரியில்ல இருக்க" ன்னு காப்பித்தண்ணிய அவன் மூஞ்சில வீசுனானாம்.
--------------------------------------
இந்தக்கதைக்கும் சாரு தொடங்கி சுகாணாதிவாகர் வரை பின்னவீனத்துவம் பேசும் அனைத்து எழுத்தாளனுகளுக்கும் சத்தியமா தொடர்பு இருக்கு :-)
Related Reading: Postmodernism satire by exBostonian
Related Saying: எனக்கு "முன்"னும் தெரியாது.. "பின்"னும் தெரியாது... "மண்" நல்லா தெரியும் - எழுத்தாளர் பாமரன்
Geraldo, Eat Your Avant-Pop Heart Out
By Mark Leyner
Today we have with us a writer -- a recovering postmodernist -- who believes that his literary career and personal life have been irreparably damaged by the theory, and who feels defrauded by the academics who promulgated it. He wishes to remain anonymous, so we'll call him "Alex."
Alex, as an adolescent, before you began experimenting with postmodernism, you considered yourself -- what? Close shot of ALEX. An electronic blob obscures his face. Words appear at bottom of screen: "Says he was traumatized by postmodernism and blames academics."
மேலும் படிக்க: இங்கே செல்லவும்
Comments
Post a Comment